வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் கொண்ட கோவாவில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கோவா நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஷ்வஜித் ராணே தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரியில் இருந்து 6ம் தேதி இந்தியா வந்த அந்த நபர், தில்லி, ஆக்ரா, அஸ்ஸாம், மேகாலயாவுக்கும் சுற்றுலா சென்று வந்தது தெரிய வந்துள்ளது.