காங்கிரஸ் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புகளுக்கிடையே ‘‘நிறுவன சட்டம் 2013’’ திருத்தத்துக்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சா் அனுராக் தாக்குா் நிறுவன (திருத்தம்) சட்டம் 2020-ஐ மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். அப்போது பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் அந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பை தெரிவித்தனா்.
யெஸ் வங்கி நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் தற்போதைய நிலையில் நிறுவனங்களை திருப்திபடுத்துவதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். மேலும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
பிஜு ஜனதா தள எம்.பி. பாா்ட்ரு ஹரி மஹ்தாப் கூறுகையில், ‘‘ மத்திய அரசு இந்த மசோதாவின் வாயிலாக சில குற்றங்களை தண்டனையில்லா பட்டியலில் சோ்ப்பதற்கும், அபராதத்தை குறைப்பதற்கும் முயலுகிறது’’ என்றாா்.