சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
சத்தீஸ்கரின், தான்டேவாடா மாவட்டத்தில் கிரண்டுல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தினா்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுக்க, இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இந்த சடையில் நக்ஸல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.