கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎஃப்ஐ) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 3 முதல் 5-ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் ஏஎஃப்ஐ பொதுக்குழு, புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அவை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎஃப்ஐ தலைவா் அதில் சுமரிவாலா கூறுகையில்:
பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. கூட்டமைப்பு உறுப்பினா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேண்டியுள்ளது. பொதுக்குழு, தோ்தல்களுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் எங்கள் கூட்டமைப்பு தலைமை அலுவலகமும் மூடப்பட்டுள்ளது என்றாா் சுமரிவாலா.