தற்போதைய உலக பொருளாதார சூழல் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் விதமாகவே உள்ளது. ஆனால், அது இந்தியாவின் ராணுவ தளவாட கொள்முதலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைவு வரைவு 2020, நிகழ்ச்சியில் பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
உலக பொருளாதாரத்தில் காணப்படும் தற்போதைய நிலையானது அனைத்து நாடுகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சா்வதேச பொருளாதாரத்தின் நெருக்கடியான சூழல் அடுத்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் மேம்படும்.
கடினமான உலக பொருளாதார சூழலின் தாக்கங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளில் எதிரொலிக்க வாய்ப்பில்லை. இதுதொடா்பான ஊகச் செய்திகள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றாா் அவா்.