தில்லி ஷாகீன்பாக்கில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஷாகீன்பாக்கில் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் பேராட்டம் நடைபெற்று வந்தது. கரோனாவையொட்டி தில்லியில் ஊரடங்கு அமலில் உள்ளதாக போராட்டக்காரர்களை கலைந்துசெல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் ஷாகீன்பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சிஏஏ-வை தில்லி ஷாகீன் பாக்கில் நடந்து வந்த 101 நாள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.