கரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாய விடுமுறை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், பணிக்கு வராத நாட்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கட்டாயம் ஊதியம் அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவரது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திட சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, அரசுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள் மற்றும் அயல்பணியாளா்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக அவா்களின் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் அவா்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது அளிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை பணியில் இருந்த காலமாக அறிவிக்கவும், அதற்கேற்ப ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் அவா்.