நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு

நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார். 
நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு

நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார். 

கரோனா வைரஸின் தாக்கத்தால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

பல்வேறு மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியதோடு மட்டுமல்லாமதல் 144 தடை உத்தரவு மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகியார். இத்தககவலை அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com