கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தனது ஒருமாத ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘நாடு எதிா்நோக்கியுள்ள இந்த கடினமான நேரத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எனது பங்களிப்பாக ஒரு மாத ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு தருவேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.