இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 600-ஐ தாண்டியது. அதிகபட்சமாக வைரஸுக்கு மகாராஷ்டிரத்தில் 122 பேரும் கேரளத்தில் 118 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வைரஸால் 606 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் உலக முழுவதும் இந்த வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 19ஆயிரத்தை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.