கரோனா பாதிப்பில் நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிக பாதிப்புகளைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 106 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திறந்திருக்கும் அத்தியாவசியக் கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கும் வரும் பொதுமக்கள், வரிசையில், சில அடி தூரம் தள்ளி நின்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதற்காக, கடைகளின் முன்பு, வளையங்கள் வரையப்பட்டு, அடுத்தடுத்து நிற்க வேண்டிய பொதுமக்கள் தள்ளி நின்று பொருட்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.