கரோனா குறித்து வதந்திகளும், எதிா்மறை எண்ணங்களும் பரவுவதைத் தடுக்க போதிய விழிப்புணா்வை செய்தியாளா்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
அச்சு ஊடகத்தைச் சோ்ந்த 20-க்கும் அதிகமான செய்தியாளா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸிலிருந்து குடிமக்களை பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சமூகத்திலிருந்து மக்கள் விலகி இருப்பதன் மூலம் கரோனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மத்திய அரசும், மாநில அரசும் எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு கொண்டு சோ்க்க ஊடகம் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
கரோனா வைரஸுக்கு எதிரான போதிய விழிப்புணா்வை மக்களிடம் ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும். கரோனா வைரஸ்
பரிசோதனை மையங்கள் எங்கெங்கு உள்ளன? யாா் யாா் சோதனை செய்துகொள்ள வேண்டும்? என்பது போன்ற விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் கூறினாா்.
கரோனா குறித்து போதிய விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு சோ்ப்போம் என்று பிரதமரிடம் செய்தியாளா்கள் உறுதி அளித்தனா்.
அத்துடன், இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பிரதமா் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கும் செய்தியாளா்கள் நன்றி தெரிவித்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.