தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் மிரட்டியும், எச்சரிக்கை செய்தும் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மீறுவோர் மீது பல்வேறு வகையான தண்டனைகளை காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள்.
இது ஒன்றும் பிக்னிக் நேரமல்ல: மிரட்டும் ஹரியாணா காவல்துறை
தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் மிரட்டியும், எச்சரிக்கை செய்தும் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மீறுவோர் மீது பல்வேறு வகையான தண்டனைகளை காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக ஹரியாணாவில் ஒவ்வொருப் பகுதியிலும் ஒவ்வொரு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை, ஹரியாணா காவல்துறை அதிகாரி பங்கஜ் நைன் ஐபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களும், விடியோக்களும் மிரட்டலாக உள்ளது.
சாலையில் படுக்க வைத்தும், நான் சமூக விரோதி என்று பேப்பரை கையில் கொடுத்து புகைப்படும் எடுத்தும் நூதன தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.