கரோனா.. உலகை உலுக்கி வரும் ஒற்றைச் சொல்.. பல உயிர்களை பலிகொண்டு, இன்னும் தாகம் அடங்காமல் உலக நாடுகளை வேகமாக சூறையாடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.
கரோனாவையும் விட்டு வைக்காமல் தமிழர்கள் மீம்ஸ்களைப் போட்டுத் தாக்கி வருகிறார்கள். ஆனால், அந்த மீம்ஸ்கள் பலவும் எச்சரிக்கையை ஏற்படுத்துவதாக இருப்பதால், வரவேற்கவே செய்யலாம்.
அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது, கரோனா பரவலைத் தடுக்க யாரால் முடியும் என்று கேட்டால், அந்த சங்கிலித் தொடரை என்னாலும் உன்னாலும்தான் தடுக்க முடியும் என்று வலியுறுத்துகிறது இந்த வார்த்தை விளையாட்டு.
அது என்னவென்று பார்த்தீர்களா... இது யோசிக்க வைக்கிறது. உங்களையும்.. என்னையும்.
இதை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரியும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.