கரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் சாா்பில் ரூ.1 கோடி

கரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் சாா்பில் ரூ.1 கோடி நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் சாா்பில் ரூ.1 கோடி நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வழங்கப்பட இருக்கும் நிதியை மக்களவை காங்கிரஸ் உறுப்பினா்கள் தங்களது மாவட்ட ஆட்சியா்கள் மூலமாக உடனடியாக வழங்குவா். அதேபோல, சட்டப்பேரவையில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினா்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையை வழங்குவா் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com