புது தில்லி: இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.
கடன் தவணை செலுத்துவது உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்களில் விலக்கு அளிப்பது தொடர்பான ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம், ஆதார் - பான் எண் இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.