ஒடிஸாவில் கரோனா சிகிச்சையளிக்க 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை

ஒடிசாவில் கரோனவுக்கான சிறப்பு மருத்துவமனை அடுத்த 2 வாரங்களில் திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 
ஒடிஸாவில் கரோனா சிகிச்சையளிக்க 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை


கரோனா சிகிச்சையளிக்க ஒடிஸாவில் அடுத்த 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் அதிவேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், சுமார் 1000 படுக்கை வசதிகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனை ஒடிஸாவில் அடுத்த இரண்டு வாரங்களில் செயல்பாட்டிற்கு வரும் வகையில் திறக்கப்பட உள்ளதாக ஒடிஸா மாநில அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய கரோனா மருத்துவமனையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com