கரோனா சிகிச்சையளிக்க ஒடிஸாவில் அடுத்த 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் அதிவேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், சுமார் 1000 படுக்கை வசதிகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனை ஒடிஸாவில் அடுத்த இரண்டு வாரங்களில் செயல்பாட்டிற்கு வரும் வகையில் திறக்கப்பட உள்ளதாக ஒடிஸா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கரோனா மருத்துவமனையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.