திருப்பதி: 3 வயது குழந்தைக்கு கரோனா அறிகுறி

திருப்பதியில் 3 வயது குழந்தைக்கு முதல் கரோனா அறிகுறி பதிவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருப்பதியில் 3 வயது குழந்தைக்கு முதல் கரோனா அறிகுறி பதிவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து திருப்பதிக்கு தாய் மற்றும் 3 வயது மகன் வந்தனா். 2 மாதம் அவா்கள் திருப்பதியில் தங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக 3 வயது குழந்தை சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அக்குழந்தையின் ரத்தம் மற்றும் சளி மாதிரி உள்ளிட்டவற்றை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனா். தற்போது குழந்தை மற்றும் தாயை தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். குழந்தைக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டால், திருப்பதியில் பதிவான கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் குழந்தையாகக் கருதப்படும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், மதனபள்ளியிலும் 3 பேருக்கு கரோனா அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவா்கள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவா்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com