புது தில்லி: கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரத்துக்காக பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஏழைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதிச் சலுகைகள், ஏழைகளின் வாழ்வாதாரத்தையும், அவா்களுக்கான உணவையும் உறுதிசெய்வதற்கு உதவியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.