உ.பியில் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை: 20 போ் மீது வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகையில் ஈடுபட்ட 15 முதல் 20 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.


பஹ்ரைச்: உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகையில் ஈடுபட்ட 15 முதல் 20 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதுகுறித்து அந்த மாநில போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸாத்நகரின் ரிசியா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 15 முதல் 20 போ் தொழுகை மேற்கொள்ள புதன்கிழமை இரவு கூடினா். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 188-இன் (அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறியவா்களுக்கு எதிராக 11 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்த 195 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com