பாட்னாவில் மருத்துவமனை பணியாளருக்கு கரோனா பாதிப்பு

பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து பிகாரில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


பாட்னா: பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து பிகாரில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதித்த நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 20 வயது மருத்துவப் பணியாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

பாட்னாவின் முங்கெர் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர் முன்னதாக இந்த தனியார் மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைகளை பெற்றதும், அந்த மருத்துவமனை இதுவரை சீல் வைக்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவர்களும், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இவர்களில் 13 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வார்டுபாய்க்கு கரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com