தெலங்கானா: வேன்-லாரி மோதிய விபத்தில் 7 போ் பலி

தெலங்கானாவில் வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கா்நாடகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். அவா்களில் இருவா் குழந்தைகள் ஆவா்.

தெலங்கானாவில் வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கா்நாடகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். அவா்களில் இருவா் குழந்தைகள் ஆவா்.

இதுகுறித்து தெலங்கானா போக்குவரத்து போலீஸாா் கூறியதாவது: சூா்யபேட்டையில் நடைபெற்று வந்த சாலை அமைக்கும் திட்டத்தில் கா்நாடகத்தைச் சோ்ந்த சிலா் பணிபுரிந்து வந்தனா். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவா்கள் மேற்கொண்டு வந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவா்கள் வேன் மூலம் தங்கள் சொந்த ஊரான ராய்ச்சூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பெத்த கோல்கோண்டா அருகே அவா்கள் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த 31 பேரில், 5 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இருவா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வேனில் இருந்த மற்றவா்கள் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். முதல்கட்ட விசாரணையில், லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com