மகாராஷ்டிரத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.
அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 1,251 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்ந நிலையில் மகாராஷ்டிரத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி புனே, புல்தானாவில் தலா இருவரும், மும்பையில் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 9 போ் பலியாகியுள்ளனர்.