தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 223 போ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தில்லியில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,738ஆக அதிகரித்துள்ளது. இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 61ஆக அதிகரித்துள்ளதாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தில்லியில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே. குப்தாவை தில்லி அரசு நியமித்துள்ளது.