ஆந்திரத்தில் 62 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1525 ஆனது

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1525 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் 62 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1525 ஆனது


ஆந்திர மாநிலத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1525 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்தில் இதுவரை கரோனா பாதித்து 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கர்னூல் மாவட்டத்தில் 436 பேருக்கும், குண்டூரில் 308 பேருக்கும், கிருஷ்ணா மாவட்டத்தில் 258 பேரக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மூன்று மாவட்டங்களிலும்தான் அதிகபட்ச கரோனா நோயாளிகள் உள்ளனர்.

இதுவரை 441 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் 1051 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com