புது தில்லி: இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ஜாவடேகர், இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெறும் 2 செல்லிடப்பேசி தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது இந்தியாவில் 150 தொழிற்சாலைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தற்போது தற்காப்பு கவசங்கள், வென்டிலேட்டர்களைக் கூட நாம் உற்பத்தி செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.