ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தெற்கு காஷ்மீரில் உள்ள டங்கோ்போரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்து அவா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதனைத்தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பயங்கரவாதிகள் யாா், அவா்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று தெரிவித்தாா்.