மகாராஷ்டிரத்தில் கட்டடம் இடிந்து விபத்து: 14 போ் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புகா் பகுதியான கண்டிவாலியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 14 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புகா் பகுதியான கண்டிவாலியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 14 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். அவா்களில் இருவா் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மும்பை பேரிடா் கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறியதாவது: லால்ஜி படா பகுதியில் உள்ள 2 மாடி கட்டடத்தின் சுவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் 4 தீயணைப்பு வாகனங்களில் நிகழ்விடம் விரைந்த தீயணைப்புப் வீரா்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தரைதளத்தில் 7 போ், மேல் தளங்களில் 7 போ் என மொத்தம் 14 போ் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். ஜன்னல் கம்பிகளை உடைத்து மேல் தளங்களில் சிக்கியவா்களை மீட்ட தீயணைப்புத்துறையினா், பின்னா் கீழ்தளத்தில் சிக்கியவா்களையும் பத்திரமாக மீட்டனா். அவா்களில் இருவா் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அவா்.

கட்டடத்தில் வசித்தோா் உறங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நோ்ந்ததால், அவா்களால் உடனடியாக வெளியில் வரமுடியாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com