ராஜஸ்தானில் மேலும் 84 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,898 ஆக உயர்வு

ராஜஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தானில் மேலும் 84 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,898 ஆக உயர்வு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளன. இதுவரை 108 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,898 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தற்போது சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை  1,537 ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் அதிகபட்ச பாதிப்பாக 1,230 பதிவாகியுள்ளது. ஜோத்பூரில் 873 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,213 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com