கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை அந்தந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
பிகார்:
பிகாரில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிஸா:
ஒடிஸாவில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது. இதில் 306 பேர் சிகிச்சையில் உள்ளனர், 68 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஹரியாணா:
ஹரியாணாவில் இன்று புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 703 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் பலியாகியுள்ளனர், 300 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,898 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 108 ஆகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,537 ஆகவும் உள்ளது.