கரோனா: பிகார், ஒடிஸா, ஹரியாணா, ராஜஸ்தான் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை அந்தந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை அந்தந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

பிகார்: 

பிகாரில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிஸா:

ஒடிஸாவில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது. இதில் 306 பேர் சிகிச்சையில் உள்ளனர், 68 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஹரியாணா:

ஹரியாணாவில் இன்று புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 703 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் பலியாகியுள்ளனர், 300 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,898 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 108 ஆகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,537 ஆகவும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com