மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய (திங்கள்கிழமை) சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,230 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 23,401 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 868 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை:
மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,355 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,110 பேர் குணமடைந்துள்ளனர். 528 பேர் பலியாகியுள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 916 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர்.