கரோனா மீட்பு விகிதம் 31.15% ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 
கரோனா மீட்பு விகிதம் 31.15% ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 4,213 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152 ஆகவும், உயிரிழப்பு 2,206 ஆகவும் உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 1,559 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். கரோனா மீட்பு விகிதம் 31.15% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 20,917 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44029 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com