இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் பதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 67,152-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பலியானோரின் எண்ணிக்கை 2,109-லிருந்து 2,206-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,452-லிருந்து 20,917-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.