கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பிற மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
தெலங்கானா:
தெலங்கானாவில் இன்று 79 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,275 ஆக உயர்ந்துள்ளது. இதில் 444 பேர் சிகிச்சையில் உள்ளனர். 801 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,573 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,758 பேர் குணமடைந்துள்ளனர். 1,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். 80 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,063 ஆக உயர்ந்துள்ளது.
ஜார்கண்ட்:
ஜார்கண்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 161 ஆக உள்ளது. இதில் 80 பேர் சிகிச்சையில் உள்ளனர். 78 பேர் குணமடைந்துள்ளனர்.
குஜராத்:
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 347 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,542 ஆக உள்ளது. இதில் 2,780 பேர் குணமடைந்துள்ளனர். 513 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 3,785 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 171 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,747 பேர் குணமடைந்துள்ளனர், 221 பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் இன்று 174 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,988 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 113 பேர் பலியாகியுள்ளனர். 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.