தில்லியில் புதிதாக 310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:
தில்லியில் மே 10 நள்ளிரவு 12 மணி வரை புதிதாக 310 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 7,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,069 பேர் குணமடைந்துள்ளனர், 73 பேர் பலியாகியுள்ளனர்.