கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
பிகார்:
பிகாரில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா:
ஒடிசாவில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இதில் 326 பேர் சிகிச்சையில் உள்ளனர், 85 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஹரியாணா:
ஹரியாணாவில் இன்று புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 730 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 11 ஆக உள்ளது. இதுவரை 337 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,988 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 113 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,264 ஆகவும் உள்ளது.