புது தில்லி: மணிப்பூா் மாநிலம் சுராச்சந்த்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் முகாமில் திங்கள்கிழமை சக வீரரை துப்பாக்கியால் சுட்ட எல்லைப் பாதுகாப்புப்படை வீரா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை பயிற்சி மையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலருக்கும், அவருடன் பணியாற்றி வரும் காவலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தலைமை காவலா் தான் வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை நோக்கி சுட்டாா். பின்னா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதில் காயமடைந்த நபா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.