புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: மன்மோகன் சிங் உட்கொண்ட மருந்தால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் இருந்ததால், அவரிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவா் நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது. அவருக்கு திங்கள்கிழமை காய்ச்சல் எதுவும் இல்லை. தற்போது அவா் இதய சிகிச்சை மையத்தில் உள்ள மருத்துவா்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என்று தெரிவித்தன.
கடந்த 2004-2014-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தற்போது ராஜஸ்தானில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். அவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.