விபத்தில் மகனை இழந்த தம்பதிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

விபத்தில் தங்கள் ஒரே மகனை இழந்த தம்பதிக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்து அவர்களது பிள்ளை ஏக்கத்தை தீர்த்துள்ளன.
விபத்தில் மகனை இழந்த தம்பதிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்


விபத்தில் தங்கள் ஒரே மகனை இழந்த தம்பதிக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்து அவர்களது பிள்ளை ஏக்கத்தை தீர்த்துள்ளன.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட அதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரன் (64) - குமார் (54) தம்பதி. இவர்களது ஒரே மகன் ஸ்ரீஜேஷ் கடந்த 2018ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

இவர்களது ஒரே மகன் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிறகு, இவர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தனர். அவர்களது துயரம், தற்போது இரட்டைக் குழந்தைகள் மூலம் துடைக்கப்பட்டுள்ளது. தாயும், சேய்களும் நலமாக இருக்கிறார்கள்.

தங்களுக்கு பிள்ளை இல்லையே என்று வாடிய தம்பதியினர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றனர்.  வயதாகிவிட்டதால் குழந்தை பிறக்குமோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால், மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக, ஓராண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த குமாரி ஐவிஎஃப் முறையில் கருவுற்றார். 

தற்போது இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் இவர்கள் மீண்டும் தாய் - தந்தையாகி அந்த மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com