புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 20 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், நேற்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் புது தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் தில்லியில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 359 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 7,998 ஆக உள்ளது.
நேற்று 346 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2858 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.