மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90,000 கோடி

​மின் விநியோக நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரூ. 90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90,000 கோடி


மின் விநியோக நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரூ. 90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி தெரிவித்ததாவது:

"மின் விநியோக நிறுவனங்களின் வருவாய் சரிவைச் சந்தித்துள்ளது. தேவை குறைந்துள்ளதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணப்புழக்கத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 94,000 கோடி தற்போது நிலுவையில் உள்ளது.

விநியோக நிறுவனங்களுக்கு பிஎஃப்சி/ஆர்இசி மூலம் ரூ. 90,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. மின் விநியோக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் முறையிலான கட்டண வசதி ஏற்படுத்தப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com