கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள 3-ஆம் கட்ட பொதுமுடக்கம், மே 17-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த முதல்வா் சா்வானந்த சோனோவால் கூறியதாவது:
பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக, அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கும். இதுதொடா்பாக, அஸ்ஸாம் அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டோம். நான்காம் கட்டமாக, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
அனைத்து மாநிலங்களின் கருத்தை அறிந்த பிறகு பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். வரும் நாள்களில் கரோனா பரவல் அதிகரிக்கும். இருப்பினும் அதைக் கண்டு மக்கள் பீதியடைய தேவையில்லை என்றாா் அவா்.