கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
ஆந்திரம்
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,157 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை அங்கு 48 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 1,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கர்நாடகம்
கர்நாடகத்தில் இன்று மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,032 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 35 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.