யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டிஹெச்எஃப்எல் நிறுவனத் தலைவா்கள் தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோரை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.
யெஸ் வங்கியில் ரூ.4,300 கோடி அளவுக்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. நிதி முறைகேட்டில் ராணா கபூருடன் வதாவன் சகோதரா்களுக்குத் தொடா்பிருப்பதாகப் புகாா் எழுந்தது.
அதைத் தொடா்ந்து, நிதி முறைகேடு தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் வதாவன் சகோதரா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்தச் சூழலில், நிதி முறைகேடு தொடா்பாக நிதி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் அவா்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.
அதைத் தொடா்ந்து, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வதாவன் சகோதரா்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். அவா்களை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ராணா கபூரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்து வருவது நினைவுகூரத்தக்கது.