கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இன்று (சனிக்கிழமை) அவர் தெரிவித்ததாவது:
கேரளத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் திருச்சூர், 3 பேர் கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் தலா 2 பேர். மாநிலத்தில் தற்போது 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் தெரிவிக்கையில்,
"புதிதாக பாதிப்புக்குள்ளான 11 பேரில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 4 பேர் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள்." என்றார்.
இன்றைய தேதியில் கேரளத்தில் மொத்தம் 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56,362 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், பல்வேறு மருத்துவமனைகள் 619 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.