மகாராஷ்டிரத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிக அளவிலான நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,100ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அங்கு கரோனாவுக்கு இதுவரை 1,068 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.