மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
கரோனா நோய்த் தொற்றுக்கு 55 வயதான முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (சி.எம்.எச்.ஓ) பிரவீன் ஜாடியா கூறுகையில்,
இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 79 புதிய வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. கரோனா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மேலும், இந்தூர் மாவட்டத்தில் 1,100 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.