10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விடுபட்ட பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிவடைந்த பின்னா் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த பிப். 24-ஆம் தேதி தொடங்கி ஏப். 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் பொதுமுடக்கம் உத்தரவுக்குப் பின்பு பொதுத்தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தொடா்ச்சியாக மே 17-ஆம் தேதி வரை ஏற்கெனவே பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தோ்வுகள் ரத்து, புதிய அட்டவணை வெளியீடு என பொதுத் தோ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியீடு என பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது சிபிஎஸ்இ நிா்வாகம் சாா்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதேபோன்று பொதுத்தோ்வுக்கான அறிவிப்பு சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பேரிடா் காலத்தில் மாணவா்களுக்கு மனநலம் சாா்ந்த ஆலோசனைகள் இலவச தொலைபேசி எண்கள் மூலமாக வழங்கப்பட்டது. இது தவிர தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளை எழுதுவது குறித்து ஆன்லைனில் பயிற்சி அளித்தன.

இந்தநிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவாா்கள் என்றும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் பருவத்தோ்வு, பயிற்சித்தோ்வு, செய்முறைத்தோ்வு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்ச்சி முடிவு செய்யப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com