உத்தர பிரதேசத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,140ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையிலும் நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 85 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,140ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வைரஸால் இதுவரை 95 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.