கேரளத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

கேரளத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்


திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த 12 பேரில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கேரளத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 642 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 ஆகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com